×

கண்டலேறு அணையிலிருந்து தமிழகத்துக்கு 411 கன அடி தண்ணீர் வருகை

சென்னை: ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை- தாமரைக்குப்பம் ஜீரோ பாயின்ட்டில் 411 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக ஆந்திரா-தமிழக நதிநீர் ஒப்பந்தப்படி ஆண்டுதோறும், ஆந்திர அரசு தமிழகத்துக்கு 15 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும். கண்டலேறு அணையில், போதிய அளவு தண்ணீர் இருப்பு உள்ளதால், தெலுங்கு-கங்கா ஒப்பந்தப்படி 8 டிஎம்சிக்கு மேல் தண்ணீர் இருந்தால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடலாம்.

இந்நிலையில் தமிழக அரசின் நீர்வளத்துறை அதிகாரிகள் கடந்த ஏப்ரல் மாதம் கோரிக்கை வைத்ததால், ஆந்திர அரசின் நீர்வளத்துறை அதிகாரிகள் இரண்டு தவணையாக தண்ணீர் திறந்துவிட்டனர். தற்போது, மழை பெய்து வருவதால், கண்டலேறுவில் இருந்து வினாடிக்கு 2000 கன அடி தண்ணீர் கூடுதலாக திறக்கப்பட்டது. தற்போது தமிழக எல்லையான ஜீரோ பாயின்ட்டில் நேற்று 411 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இதுவரை தமிழகத்திற்கு 3,500 மில்லியன் கன அடி தண்ணீர் அதாவது 3.5 டிஎம்சி தண்ணீர் கிடைத்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post கண்டலேறு அணையிலிருந்து தமிழகத்துக்கு 411 கன அடி தண்ணீர் வருகை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Dandaleram ,Chennai ,Lotamakupam Zero point ,AP ,Detection ,Discover Dam ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...